புதன், 25 பிப்ரவரி, 2015

ஐதீகங்கள்


ஐதீகங்கள்
நரகாசுரவதத்தை கொண்டாடும் விதத்தில் தீபாவளியை நம்ம ஊரில் கொண்டாடுகிறோம். நடைமுறையில் உள்ள வேறு சில பல ஐதீகங்கள்.*ஐப்பசி மாத அமாவாசை அன்று தான் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது வெளி வந்த மங்கள பொறுள்களுடன் மகா லக்ஷ்மி அவதரித்தார். ஆகவே தீபாவளி மகாலக்ஷ்மி பிறந்த நாள்.*12 ஆண்டு வனவாசத்திற்கு பிறகு பஞ்ச பாண்டவர்கள் நாடு திரும்பிய நாளை தீபமேற்றி கொண்டாடும் நாள்.*வாமனனாக அவதரித்த மகா விஷ்ணு மகாபலியின் சிறையிலிருந்து லக்ஷ்மியை மீட்ட நாள்.*விக்கிரமாதித்தன் அரசராக முடிசூட்டிய நாள்.*ராவண வதத்தை முடித்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமனுடன் அயோத்தி திரும்பிய நாள்.*சமண குருவான மஹாவீரர் தீர்த்தங்கரர் முக்தியடைந்த தினம்.*மஹாராஷ்ட்ராவில் தீபாவளி அன்று பெண்கள் தங்கள் கணவர், சகோதரர்களின் தீர்க்காயுளுக்காக யமனை வழிபடுகின்றனர்.*வங்காளத்தில் தீபாவளியை மஹா நிஷா என்று கொண்டாடுகிறார்கள்.அன்று 64,000 யோகினிகள் புடைசூழ காட்சி தந்தார் என்று நம்புகின்றனர்.*ராஜச்தான் மாநிலத்தில் அன்று பூனைகளுக்கு வழிபாடும் படையலும் உண்டு.அவர்கள் பூனையை லக்ஷ்மியின் அம்சமாக கருதுகிறார்கள்.*பீகாரில் தீபாவளி அன்று ஆண்கள் கூடை நிறைய நெற்கதிர்களும் புல்லும் எடுத்து கொண்டு கிராமத்தை வலம் வருகின்றனர்.*குமாவோன் மலைகளில் வீடுகளில் ரங்கோலிகள் போடபடுகின்றன.பெண்கள் அரிசி மாவு, வண்ணங்கள் கலந்து போடபடும் ரங்கோலிகளை கற்பூரமேற்றி வழிபடுகின்றனர். சந்தனத்தால் செய்ய பட்ட லட்சுமி உருவ சிலையை தாமிரத் தட்டில் வைத்து கரும்பு சாறால் அபிஷேகிக்கிறார்கள்.*மராட்டியர்கள் தீபாவளி அன்று சீட்டாடுவதை விரும்புகின்றனர். அன்று ஆட்டத்தில் தோற்பது ராசியானதாக கருத படுகிறது.*குஜராத்தியர் தீபாவளி அன்று புது கணக்கை ஆரம்பிக்கின்றனர்.*தீபாவளி அன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாக கருதபடுகிறது.உப்பில் மகாலக்ஷ்மி வசிப்பதாக ஐதீகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக